Last Updated : 30 Dec, 2014 12:28 PM

 

Published : 30 Dec 2014 12:28 PM
Last Updated : 30 Dec 2014 12:28 PM

எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்தபடி ஏற்றம் கண்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். நடப்பாண்டை விட அடுத்த ஆண்டின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு வருடங்களாக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து வந்தது, இந்த வருடம் அதில் மாற்றங்கள் வந்தது. இந்த வளர்ச்சி நிலை அடுத்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

நமது பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 9 சதவீதமாக இருந்தது. 2008 பொருளாதார நெருக்கடி காலகட்டத்துக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இது நீடித்தது. அதற்கு பிறகு பொருளாதார வளர்ச்சி படிப்படியாகக் குறைந்து கடந்த இரண்டு வருடங்களாக 5 சதவீத அளவுக்கு சரிந்து விட்டது என்றார். 2013 -14 நிதி ஆண்டில் 4.9 சதவீதமாக இருந்த வளர்ச்சி வீதம் நடப்பாண்டின் முதல் அரையாண்டு காலத்தில் 5.5 சதவீதமாக ஏற்றம் கண்டுள்ளது என்றார். தற்போதைய நிலையில் ஜிடிபியின் வளர்ச்சி 5.5 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் 4.7 சதவீதமாக இருந்தது.

வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன கூறும்போது பொருளாதார வளர்ச்சி காணக்கூடிய நிலையில் உள்ள சில நாடுகளில் நமது இந்தியாவும் ஒன்று எனக் குறிப்பிட்டார். ஐஎம்எஃப் அக்டோபர் மாத அறிக்கையில் 2014 -15 ஆம் ஆண்டில் இந்திய ஜிடிபி 5.6 சதவீதமாக வளரும் என குறிப்பிட்டுள்ளனர். ஆண்டின் மையகால கணிப்பின்படி அரசின் திட்டங்கள் பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.

வட்டிக் குறைப்பு அவசியம்

கடனுக்கான வட்டி விகிதங் களைக் குறைக்க ஆர்பிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தித் துறையின் வளர்ச்சி நெகட்டிவ்வாக உள்ளது. எனவே இதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். மேக் இந்தியா திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யும் பெரும் உற்பத்தி நிறுவனங்களை அடையாளம் கண்டு அவர்களை பக்கபலமாக ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

இந்திய தொழில்துறை உற்பத்தியின் வீதம் 4.2 சதவீமாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதன் வளர்ச்சி 1.2 சதவீதமாக இருந்தது. உட்கட்டமைப்பு வேலைகளில் தேக்கமும் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டார். அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ஊக்கப்படுத்த 25 துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x