Published : 01 Dec 2014 09:37 AM
Last Updated : 01 Dec 2014 09:37 AM
சென்டரல் பேங்க் ஆப் இந்தியாவின் எப்.சி.என்.ஆர்-பி வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வட்டி விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
இதில் வெளிநாட்டு இந்தியர்கள், அவர்கள் வசிக்கும் நாடுகளின் நாணயத்தின் மதிப்பிலேயே முதலீடு செய்யலாம். நாணய மதிப்பின் ஏற்ற இறக்கங்கள் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
இதன்படி ஐந்து வருட அமெரிக்க டாலர் டெபாசிட்டுக்கு 3.72% வட்டியும், பவுண்ட் டெபாசிட்டுக்கு 3.55%, யூரோ டெபாசிட்டுக்கு 2.46%, கனடா டாலர் டெபாசிட்டுக்கு 3.95% மற்றும் ஆஸ்திரேலியா டாலர் டெபாசிட்டுக்கு 5.07 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. இந்த அனைத்து டெபாசிட்களுக்குமான முதலீட்டு காலம் 5 வருடங்கள் ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT