Published : 05 Jul 2019 02:59 PM
Last Updated : 05 Jul 2019 02:59 PM
மத்திய பட்ஜெட் வளர்ச்சி மற்றும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பட்ஜெட் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நடப்பு நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழுமையான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக நாட்டை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். நமது இலக்கை நோக்கி பயணிக்கும் பட்ஜெட்டாக இது உள்ளது. நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.
பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட். வரி விதிப்பு முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. 21ம் நூற்றாண்டில், இந்தியாவின் எதிர்பார்ப்பை இந்த பட்ஜெட் நிறைவேற்றும் என நம்புவோம். நடுத்தர மக்களின் முன்னேற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விவசாயத்தை புதிய திசையில் பயணிக்க வைக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. உள்கட்டமைப்பை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த படஜெட் இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும், நாட்டு மக்களை திருப்திபடுத்தும்.
இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT