Published : 03 Aug 2017 10:49 AM
Last Updated : 03 Aug 2017 10:49 AM

நீல வண்ணத்தில் புதிய 50 ரூபாய் நோட்டு

புதிதாக அறிமுகமாக உள்ள 50 ரூபாய் நோட்டில் நீல வண்ணம் பயன்படுத்தப்பட உள்ளது. முதல்முறையாக ரூபாய் நோட்டு நீல வண்ணத்தில் வெளியாக உள்ளது.

கடந்த ஆண்டில் பிங்க் வண்ணத்தில் 2,000 ரூபாய் நோட்டும், கல் சாம்பல் வண்ணத்தில் 500 ரூபாய் நோட்டும் வெளியிடப்பட்டன. அதன் பிறகு தற்போது நீல வண்ணத்தில் ரூ.50 வெளியிடப்பட உள்ளது. புதிய 50 ரூபாய் நோட்டில் கருப்பு சாம்பல் வண்ணத்தில் மகாத்மா காந்தியின் படம் வரையப்பட்டிருக்கும்.

இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறியபோது,ரூபாயின் மற்றொரு புறம் தென்னிந்திய கோயில்களை மையக் கருத்தாகக் கொண்டிருக்கும். ரூபாய் நோட்டுகள் பல வண்ணத்தில் இருந்தால் அவற்றை படிப்பறிவற்ற மக்களும் வேறுபடுத்தி பார்க்கலாம் என்பதும் முக்கிய காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர். 2016 டிசம்பர் மாதத்தில் குறுகிய காலத்தில் ரூ.20 மற்றும் ரூ.50 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதே நேரத்தில் பழைய நோட்டுகளும் புழக்கத்தில் இருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x