Published : 01 Aug 2017 09:49 AM
Last Updated : 01 Aug 2017 09:49 AM

பீம் செயலி மூலம் ரூ.1,500 கோடிக்கு பரிவர்த்தனை

மத்திய அரசு அறிமுகப்படுத்திய பீம் செயலி மூலம் இதுவரை ரூ.1,500 கோடிக்கு பணப்பரிவர்த்தனை நடந்ததுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

மொபைல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலான பீம் செயலி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சன் கேள்வி எழுப்பினார். போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. பணமதிப்பு நீக்கத்தை மத்திய அரசு திட்டமிடாமல் செய்துவிட்டது. இதனால் நாட்டு மக்கள் மிகுந்த குழப்பம் மற்றும் சிரமத்துக்கு ஆளாகினர். தற்போது நாட்டில் 15.1 லட்சம் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்களே உள்ளன. இன்னும் 20 லட்சம் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. மக்கள் டிஜிட்டல் முறைக்கு மாறுவதற்கு தயாராகாத சூழ்நிலையால் நுகர்வு வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்று ஜெயா பச்சன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், இதுவரை பீம் செயலியை இரண்டு கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் இந்த செயலி மூலம் ரூ.1,500 கோடிக்கு பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பீம் (பாரத் இண்டர்பேஸ் பார் மணி) செயலியில் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இணைப்பு (யுபிஐ) மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x