Published : 03 Aug 2017 10:51 AM
Last Updated : 03 Aug 2017 10:51 AM
ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் இரண்டாவது பெரிய உற்பத்தி மையாக இந்தியா இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் நேற்று கூறியுள்ளதாவது:
சர்வதேச அளவிலான உற்பத்தியில் இந்தியா இரண்டாவது மிகப் பெரிய உற்பத்தி மையமாக உருவாக உள்ளது. இந்தியாவில் நான்காவது உற்பத்தில் ஆலையான பெங்களூரு நார்சபுரா ஆலையின் நான்காவது அலகு விரிவாக்கத்துக்கு பின்னர் இந்தியாவில் ஆண்டுக்கு 64 லட்சம் மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறனை நிறுவனம் பெற்றுள்ளது.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம் நார்சபுரா ஆலையின் நான்காவது உற்பத்தி அலகிற்காக ரூ.606.50 கோடி முதலீடு செய்துள்ளது. இதுவரையில் ஒட்டுமொத்தமாக ரூ.2,600 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த ஆலையில் 7,000 பணியாளர்கள் உள்ளனர். 2013ம் ஆண்டு இந்த ஆலையை தொடங்கியது. நிறுவனத்தின் ஆசிய மண்டல செயல்பாடுகளுக்கான தலைமை அதிகாரியான ஷின்ஜி ஆயாமா கூறியதாவது: உலக அளவில் 120 நாடுகளில் ஹோண்டா வாகன விற்பனையில், இந்தியா மிக அதிக தேவை கொண்ட நாடு. 2016-17-ம் ஆண்டில் உலக அளவிலான விற்பனையில் இந்தியாவின் பங்களிப்பு 28 சதவீதமாகும் .
இந்தோனேஷியாவில் எங்களது ஆண்டு உற்பத்தி திறன் 58 லட்சம் வாகனங்கள். ஆனால் சமீபத்திய விரிவாக்கத்தின் மூலம் இந்தோனேஷிய உற்பத்தி திறனை முந்தி இருக்கிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT