Last Updated : 30 Nov, 2014 01:00 PM

 

Published : 30 Nov 2014 01:00 PM
Last Updated : 30 Nov 2014 01:00 PM

பி.எஸ்.இ. சந்தை மதிப்பு 10 மடங்கு உயர்வு

சென்செக்ஸ் 29000 புள்ளிகளை நெருங்கிவரும் சூழ்நிலையில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் பங்கு களின் மதிப்பு 100 லட்சம் கோடி ரூபாயை எட்டி இருக்கிறது. கடந்த 11 வருடங்களில் சந்தை மதிப்பு 10 மடங்காக உயர்ந்தி ருக்கிறது.

11 வருடங்களுக்கு முன்பாக 2003-ம் ஆண்டு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட் டிருக்கும் பங்குகளின் மதிப்பு 10 லட்சம் கோடியாக இருந்தது. 5 மடங்கு உயர்ந்து 50 லட்சம் கோடி ரூபாயாக 2009-ம் ஆண்டு இருந்தது.

இப்போது 10 மடங்கு உயர்ந்து 100 லட்சம் கோடி ரூபாயாக இந்த பங்குகளின் மதிப்பு இருக்கிறது.

இதில் சென்செக்ஸ் பட்டி யலில் இருக்கும் 30 நிறுவன பங்குகளின் மதிப்பு கிட்டத்தட்ட பாதியாக இருக்கிறது. இந்த 30 பங்குகளின் மதிப்பு ரூ.47 லட்சம் கோடியாகும். இதில் டிசிஎஸ் நிறுவனத்தின் மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.

இதற்கடுத்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் மதிப்பு 3 லட்சம் கோடியாக இருக்கிறது.

2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஐடிசி, இன்போசிஸ், ஹெச்.டி.எப்.சி வங்கி, எஸ்.பி.ஐ., ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோல் இந்தியா ஆகிய பங்குகள் இருக்கின்றன. ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஹெச்.டி.எப்.சி., சன்பார்மா, ஹெச்.யூ.எல்., பார்தி ஏர்டெல், எல் அண்ட் டி, விப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஹெச்.சி.எல். டெக், என்.டி.பி.சி. மற்றும் ஆக்ஸிஸ் வங்கி ஆகிய பங்குகள் இருக்கிறன.

மும்பை பங்குச்சந்தையின் மொத்த பங்குகளின் மதிப்பில் புரமோட்டர்கள் வசம் 50 சதவீத பங்குகளும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வசம் 20 சதவீத பங்குகளும் இதர பங்குகள் சிறு முதலீட்டாளர்கள் மற்றும் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் வசம் இருக்கின்றன.

கடந்த வாரத்தில் 1.26% உயர்வு

நவம்பர் 28-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சென்செக்ஸ் 1.26% அதாவது 359 புள்ளிகள் உயர்ந்தது. நவம்பர் 21-ம் தேதி முடிவடைந்த வாரத்தில் சென்செக்ஸ் 28334 புள்ளியில் முடிவடைந்தது. ஆனால் நவம்பர் 28-ம் தேதி முடிவடைந்த வாரத்தில் 1.26% உயர்ந்து 28693 புள்ளியில் முடிவடைந்தது. கடந்த வாரத்தில் வர்த்தகத்தின் இடையே 28822 புள்ளியை தொட்டது சென்செக்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x