Published : 24 Jul 2017 09:47 AM
Last Updated : 24 Jul 2017 09:47 AM

கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தில் 5 கோடி லிட்டர் கச்சா எண்ணெய் திருட்டு

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கெய்ர்ன் இந்தியா எண்ணெய் நிறுவனத்தில் 5 கோடி லிட்டர் கச்சா எண்ணெய் திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த திருட்டு நடந்துள்ளது. ஆனால் தற்போதுதான் திருடு போனதை கண்டறிந்துள்ளனர்.

இந்த திருட்டில் ஈடுபட்ட 25 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில் கடத்தல் கும்பல் இந்த திருட்டில் ஈடுப்பட்டிருப்பதாகவும் தண்ணீர் லாரிகளில் கச்சா எண்ணெயை தொடர்ந்து திருடியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 5 கோடி லிட்டர் இதுவரை திருடப்பட்டிருக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் கெய்ர்ன் இந்தியா எண்ணெய் நிறுவனத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த திருட்டு நடைபெற்றுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதன் மதிப்பு 77 லட்சம் டாலராக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

75-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். இந்தத் திருட்டில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது காவல்துறை அதிகாரி கஹன்தீப் சிங்க்லா தெரிவித்தார். மேலும் கெய்ர்ன் நிறுவனம் சந்தேகத்தின் அடிப்படையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் ஒழுங்கமைப்பட்ட குமபலால் திருட்டு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எண்ணெய் பிரித்தெடுப்பதில் வரும் வீணான தண்ணீரை எடுத்துச் செல்லும் வாகனத்தில் கச்சா எண்ணெய்யை கடத்தியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

கடத்தலில் ஈடுபட்ட 30 டிரக்குகளைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. மேலும் கடத்திய பொழுது ஜிபிஎஸ் கருவிகளைச் செயலிக்க வைத்திருக்கின்றனர். திருடப்பட்ட கச்சா எண்ணெய் சாலைகள் அமைக்கவும், டீசல் உற்பத்திக்கு பயன்படுத்தியதாக காவல் துறையினர் தெரிவித் தனர். கடந்த பிப்ரவரி மாதம் உத்தர பிரதேச மாநிலத்தில் 1.5 கோடி லிட்டர் கச்சா எண்ணெய் திருடப்பட்டது. இதில் ஈடுப்பட்ட 12 பேரை போலீஸார் கைது செய்தனர். தற்போது மீண்டும் கச்சா எண்ணெய் திருப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x