Last Updated : 19 Apr, 2017 10:09 AM

 

Published : 19 Apr 2017 10:09 AM
Last Updated : 19 Apr 2017 10:09 AM

இந்திய நிறுவனங்கள் முதலீடு உயர்வு

இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் முதலீட்டு அளவு கடந்த மாதம் இரு மடங்கு அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் இந்திய நிறுவனங்கள் 299 கோடி டாலரை முதலீடு செய்துள்ளன.

கடந்த ஆண்டு (2016) இதே காலத்தில் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் உள்ள கூட்டு நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்களில் செய்த முதலீடு 142 கோடி டாலராக இருந்தது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத் தில் இந்திய நிறுவனங்கள் மேற் கொண்ட முதலீடு 86 கோடியாகும். தற்போது மார்ச் மாதத்தில் இது மேலும் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனம் 76 கோடி டாலரும், டாடா இண்டர் நேஷனல் நிறுவனம் 17 கோடி டாலரும், ஓஎன்ஜிசி 7 கோடி டாலரும் முதலீடு செய்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x