Published : 04 Mar 2014 10:47 AM
Last Updated : 04 Mar 2014 10:47 AM

டாடா ஹவுசிங் ரூ. 1,200 கோடி முதலீடு

டாடா சன்ஸ் குழுமத்தின் அங்கமான டாடா ஹவுசிங் நிறுவனம் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 8 பெருநகங்களில் இத்தகைய குடியிருப்புகளைக் கட்ட முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் புரோடின் பானர்ஜி தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனம் ரூ. 1,200 கோடியை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 10 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2030-ம் ஆண்டில் இரு மடங்காக அதிகரிக்கும்.

எனவே மூத்த குடிமக்களுக்கான வீடுகளுக்கு நல்ல கிராக்கி இருப்பதாக அவர் மேலும் கூறினார். 2018-ம் ஆண்டில் மூத்த குடிமக்களுக்கான இல்லங்களின் தேவை ரூ. 4,000 கோடியாக இருக்கும். ஆமதாபாத், மும்பை, கொல் கத்தா, சென்னை, டெல்லி மற்றும் புணேயில் 13 குடியிருப்பு திட்டப் பணிகளை மேற்கொள்ளமுடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x