Published : 21 Jan 2014 10:54 AM
Last Updated : 21 Jan 2014 10:54 AM

பங்குச்சந்தை, இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு

இன்று காலை வர்த்தக துவக்கத்தின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 61.95 புள்ளிகள் உயர்ந்து 21,267 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 19.50 புள்ளிகள் குறைந்து 6322.80 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகமாகியிருந்தது.

ஹாங்காங், ஜப்பான் போன்ற ஆசிய பங்குச்சந்தைகளில் நிலவிய ஏற்றம் இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளதாக பங்கு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாய் மதிப்பு:

இதே போல், வர்த்தக துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் அதிகரித்து 61.45 என்ற நிலையில் இருந்தது.

ஏற்றுமதியாளர்கள் மத்தியில் அமெரிக்க டாலர் விற்பனை போக்கு அதிகரித்து காணப்பட்டதாலும், வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதாலும் இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x