Published : 21 Apr 2017 10:22 AM
Last Updated : 21 Apr 2017 10:22 AM
மனிதவள குறியீட்டு காரணிகளில் சீனாவை விட இந்தியா சிறப்பாக உள்ளது என்று பொருளாதார பேராசிரியர் ஜேக்கப் குரியன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல் லாமல் சீனாவின் பொருளா தாரத்தை விட இந்திய பொருளா தாரம் ஆரோக்கியமான சூழ் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் (எம்ஐடிஎஸ்) `சீனாவின் எழுச்சி மற்றும் இந்தியாவின் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் தி ஹாப்கின்ஸ் பல்கலைகழக பொருளாதார பேராசிரியர் ஜேக்கப் குரியன் உரையாற்றினார். அப்போது சீனாவை விட இந்தியாவின் பொரு ளாதார வளர்ச்சி ஆரோக்கியமாக உள்ளது எனக் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: பொருளாதார காரணிகளைப் பார்க்கும் போது இந்தியா சிறப் பாகச் செயல்பட்டு வருகிறது. முதலீடுகளை ஈர்க்கும் நாடுகள் வரிசையில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. சீனாவில் முதலீடு கள் அதிகமாகி விட்டன. அங்கு அதிகமாக இருப்பதால் அந்த முதலீடுகள் இந்தியாவிற்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
மேலும் சீனாவில் வேலை செய்யக்கூடிய வயதுடையவர் களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. மாறாக இந்தியாவில் இந்த வயதுடைவர்களின் எண்ணிக்கை, 24 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக் கிறது. இது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய சாதக மாகும். மேலும் உள்நாட்டு நுகர்வு இந்தியாவில் அதிகமாக இருக் கிறது. இந்த காரணியும் பொரு ளாதாரத்தை மேம்படுத்தும் என்று பேராசிரியர் ஜேக்கப் குரியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT