Published : 16 Nov 2014 11:15 AM
Last Updated : 16 Nov 2014 11:15 AM
கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 0.63 சதவீதம் உயர்ந்தது. நவம்பர் 7-ம் தேதி 27868 புள்ளியில் சென்செக்ஸ் முடிந்தது. நவம்பர் 14-ம் தேதி 0.63 சதவீதம் உயர்ந்து 28046 புள்ளியில் முடிவடைந்தது. வர்த்தகம் முடியும் போது உயர்ந்த அதிகபட்ச புள்ளி இதுதான்.
நடுத்தர காலத்தில் சந்தையின் மதிப்பு உயரும் என்றே சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பணவீக்கம் ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. இதனால் வரும் டிசம்பரில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
வாராந்திர அடிப்படையில் அந்நிய முதலீடு 28 சதவீதம் அதிகரித்திருக்கிறது. நவம்பர் 7-ம் தேதி முடிவடைந்த வாரத்தில் அந்நிய முதலீடு ரூ.4,411 கோடியாக இருந்தது. ஆனால் நவம்பர் 14-ம் தேதி முடிவடைந்த வாரத்தில் 28% உயர்ந்து ரூ.5,674 கோடியாக இருக்கிறது. வெள்ளிக்கிழமை மட்டும் 683 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய முதலீடு இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT