Published : 04 Jan 2016 09:05 AM
Last Updated : 04 Jan 2016 09:05 AM

கால் டிராப் பிரச்சினை இழப்பீடு வழங்க உத்தரவு

கால் டிராப் பிரச்சினை ஏற்பட்டால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கடி தம் எழுதி இருக்கிறது. இந்த விதிமுறைகள் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக வும் டிராய் கூறி இருக்கிறது.

பேசிக்கொண்டிக்கும் போது தொழில்நுட்ப காரணங்களால் அழைப்பு தடைபடும் நிகழ்வு கால் டிராப் ஆகும். சமீபத்தில் இது போன்ற பிரச்சினைகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால் டிராய் நடவடிக்கை எடுத்துள்ளது. இது போல அழைப்பு தடைபடும் ஒரு நிகழ்வுக்கு ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். உச்சவரம்பாக ஒரு நாளுக்கு மூன்று ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைக்கு எதிராக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றம் முடிவெடுத்து தீர்ப்பு வழங்கும் போது, நாங்கள் இழப்பீடு வழங்குகிறோம் என்று இந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அசோக் சூட் தெரிவித்தார். அதேசமயத்தில் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை ஏதும் இல்லை என்பதும் எங்களுக்கு தெரியும் என்றார்

இந்த வழக்கு வரும் 6-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று டிராய் தெரிவித்துள்ளது.

இணைப்பு அறுபடாமல் 100 சதவீதம் சேவை வழங்குவது என்பது நிஜத்தில் சாத்தியம் இல்லை என்று ரிலையன்ஸ், ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட 21 நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அபராதம் செலுத்தப்பட்டால் நாங் கள் 1,000 முதல் 1,500 கோடி ரூபாய் வரை செலுத்த வேண்டி இருக்கும் என்று தொலைத்தொடர்பு நிறுவ னங்கள் நீதிமன்றத்தில் தெரிவித் திருக்கின்றன. இருந்தாலும் தற்போதைய விதிமுறைபடி அதிக பட்ச அபராதமாக ஒரு ஆண்டில் 800 கோடி ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டி இருக்கும் என்று டிராய் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x