Published : 18 Nov 2013 11:17 AM
Last Updated : 18 Nov 2013 11:17 AM

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் ஏற்றம்

வாரத்தின் முதல்நாளான இன்று, இந்திய பங்குசந்தைகள் நல்ல ஏற்றத்துடன் துவங்கியுள்ளது. காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது, சென்செக்ஸ் 301.61 புள்ளிகள் உயர்ந்து 20,701.03-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 83.70 புள்ளிகள் உயர்ந்து 6,139.85-ஆகவும் இருந்தது.

ரூபாய் மதிப்பும் உயர்வு:

ரூபாயின் மதிப்பில் ஏற்றம் காணப்படுகிறது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் உயர்ந்து ரூ.62.81-ஆக இருந்தது. முன்னதாக கடந்த வியாழன் அன்று ரூபாயின் மதிப்பு ரூ.63.11-ஆக இருந்தது.

உள்நாட்டு சந்தையில் காணப்படும் ஏற்றம், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை தொடர்ந்து விற்பனை செய்வது போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x