Published : 14 Nov 2013 02:16 PM
Last Updated : 14 Nov 2013 02:16 PM

சுப்ரதோ பக்‌ஷி - இவரைத் தெரியுமா?

#தொழில்முனைவோர்கள் பெரும்பாலும் என்ஜீனியரிங் அல்லது எம்.பி.ஏ, இல்லை இரண்டுமே படித்தவர்களாகதான் இருப்பார்கள். ஆனால் சுப்ரதோ இது இரண்டையும் படித்தவர் அல்ல. ஒடிசாவில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படித்தவர்.

#தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து 1999-ம் ஆண்டு மைண்ட் ட்ரீ நிறுவனத்தை ஆரம்பித்தார். 90களின் இறுதியில் பல ஐ.டி. நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதில் தாக்குபிடித்த சில நிறுவனங்களுள் மைண்ட் ட்ரீயும் ஒன்று.

#இப்போது இந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கும் சுப்ரதோ, நிறுவனத்துக்கு அடுத்த கட்ட தலைவர்களை உருவாக்கும் பணியில் இருக்கிறார்.

#High Performance Entrepreneur, The Professional, Go Kiss The World உள்ளிட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். சமீபத்தில் The Elephant Catcher என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.

#இவரது புத்தகங்கள் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி, மாண்டரின் மற்றும் கொரிய மொழிகளில் மொழி பெயர்க்கபட்டிருக்கின்றன.

#மைண்ட் ட்ரீ நிறுவனத்தை ஆரம்பிக்கும் முன்பு விப்ரோ நிறுவனத்தில் 18 ஆண்டுகள் வேலை பார்த்தார். அங்கிருந்து வெளியேறும் போது, ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவின் தலைவராக இருந்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x