Published : 27 Apr 2017 10:53 AM
Last Updated : 27 Apr 2017 10:53 AM
விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி விதிக்கும் திட்டம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்திருக்கிறார். முன்னதாக நிதி ஆயோக் உறுப் பினர் பிபேக் தேப்ராய் கூறும் போது, விவசாயம் மூலம் கிடைக் கும் வருமானத்துக்கு வரி விதிக்க வேண்டும். அப்போதுதான் வரி வருவாயை உயர்த்த முடியும். சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க முடியும் என சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் அருண் ஜேட்லி இது போன்ற திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என தெரி வித்தார். தவிர விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் விளக்கம் அளித்திருக்கிறார்.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்திலும் விவ சாயம் மூலம் கிடைக்கும் வருமா னத்துக்கு வரி விதிக்கப்பட மாட்டாது என அருண் ஜேட்லி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT