Published : 13 Apr 2017 11:51 AM
Last Updated : 13 Apr 2017 11:51 AM

6,000 மெகாவாட் காற்றாலை மின்சார உற்பத்தி

நடப்பு நிதி ஆண்டில் கூடுதலாக 6,000 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என இந்திய காற்றாலை மின்சார உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சர்வேஷ் குமார் தெரிவித்தார்.

மேலும் கூறியதாவது:

நடப்பு நிதி ஆண்டில் கூடுதலாக 4,500 மெகாவாட் காற்றாலை மின்சார உற்பத்திக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால் 6,000 மெகாவாட் உற்பத்தி திறன் என்னும் இலக்கை அடைய திட்டமிட்டிருக்கிறோம். கடந்த ஆண்டு மத்திய அரசின் இலக்கு 4,000 மெகாவாட். ஆனால் நாங்கள் 5,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தோம்.

கடந்த நிதி ஆண்டில் ஆந்திரா (2,190 மெகாவாட்), குஜராத் (1,275 மெகாவாட்) மற்றும் கர்நாடகா 882 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் முறையே 357 மெவா, 288 மெவா, 262 மெவா, 118 மெவா, 23 மெவா மற்றும் 8மெவா அளவுக்கு உற்பத்தி திறனை உயர்த்தின என சர்வேஷ் குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x