Published : 01 Mar 2014 11:52 AM
Last Updated : 01 Mar 2014 11:52 AM

21000 புள்ளிகளுக்கு மேலே சென்செக்ஸ்

தொடர்ந்து ஐந்தாவது நாளாக உயர்ந்து வரும் சந்தைகள், வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் 21000 புள்ளிகளுக்கு மேலே சென்றது. ஜனவரி 24-ம் தேதிக்கு பிறகு இப்போதுதான் சென்செக்ஸ் 21000 புள்ளிகளுக்கு மேலே முடிந்தது. சென்செக்ஸ் 133.13 உயர்ந்து 20120 புள்ளிகளில் முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 6276 புள்ளிகளில் முடிவடைந்தது. கேப்பிடல் குட்ஸ், வங்கி, ஹெல்த் கேர் ஆகிய பங்குகள் சந்தையின் உயர்வுக்குக் காரணமாக இருந்தன. அன்னிய முதலீடு காரணமாக சந்தை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் (பிப்ரவரி 26 வரை) சுமார் 4000 கோடி ரூபாய் அன்னிய முதலீடு இந்திய பங்குச்சந்தைக்கு வந்திருக்கிறது.

ஹிண்டால்கோ பங்கு அதிகபட்சமாக 7 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இதற்கடுத்து டி.சி.எஸ். மற்றும் டாடா மோட்டார் ஆகிய பங்குகளும் ஏற்றம் அடைந்தன.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 5 சதவித பங்குகளை ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்கள் வாங்க இருப்பதால் இந்த நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்தன. குஜராத் சுசூகி தொழிற்சாலை குறித்த முதலீட்டாளர்களுக்கு தெளிவு ஏற்படாததால் அந்த நிறுவன பங்கு 4.5 சதவீதம் சரிந்தது.

சஹாரா குழும பங்குகள் சரிவு

சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் லக்னோவில் கைது செய்யப்பட்டதால் அந்த குழும நிறுவன பங்குகள் வெள்ளிக்கிழமை சரிந்தன. சஹாரா ஒன் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் பங்கு 2.99 சதவீதம் வரை சரிந்து 60.10 ரூபாயில் முடிந்தது. சஹாரா ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் பங்கு 0.65 சதவீதம் வரை சரிந்தது.

டெக் மஹிந்திரா மற்றும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் ஆகிய வரும் மார்ச் 28-ம் தேதியில் இருந்து நிஃப்டி 50 பட்டியலில் இணையப்போகிறது. இதனால் டெக் மஹிந்த்ரா பங்கு 2.54 சதவீதமும், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் 0.98 சதவீதமும் உயர்ந்தன.

இந்த இரண்டு பங்குகள் இணைவதால் ரான்பாக்ஸி மற்றும் ஜெய்பிரகாஷ் அஸோசியேட்ஸ் ஆகிய பங்குகள் நிஃப்டி பட்டியலில் இருந்து வெளியேறின. இதனால் இந்த பங்கு 0.52 சதவீதம் சரிந்தது. இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இந்த பங்கு 19 சதவீதம் வரை சரிந்தது. ஆனால் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் பங்கு உயர்ந்து முடிவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x