Published : 24 Sep 2016 10:52 AM
Last Updated : 24 Sep 2016 10:52 AM
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வரு கிறது. டெல்லியில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற ஆலோ சனைக் கூட்டத்தின் இறுதியில் ஆண்டு வர்த்தகம் ரூ. 20 லட்சம் வரை உள்ள வர்த்தகர்களுக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு அளிப் பதென முடிவு செய்யப்பட்டது. வட கிழக்கு மாநிலங்களில் உள்ள வர்த்தகர்களுக்கு இது ரூ. 10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது.
அடுத்த கூட்டம் இம்மாதம் 30-ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது இறுதி வரைவு அறிக்கை குறித்து முடிவு செய்யப்பட்டு எந்தெந்த பொருள்களுக்கு வரி விலக்கு அளிப்பது என்பது முடிவு செய்யப்படும். ஜிஎஸ்டி வரி எவ்வளவு என்பது அடுத்த மாதம் 17-ம் தேதி தொடங்கி மூன்று நாள் நடைபெற உள்ள கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என்று ஜேட்லி தெரிவித்தார்.
ஆண்டு வர்த்தகம் ரூ. 1.5 கோடிக்கும் குறைவாக உள்ள வர்த்தகர்களுக்கு வரி விதிப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம். அதேசமயம் ரூ. 1.5 கோடிக்கும் அதிகமான வர்த்தகம் புரிவோருக்கான வரித் தொகையை மத்திய அரசு வசூலிக்கும்.
தற்போது சேவை வரி வசூலிக்கும் 11 லட்சம் வர்த்தகர்கள் தொடர்ந்து மத்திய அரசின் வரி கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருப்பர். புதிதாக இந்த பிரிவுக்குள் வருவோரை மத்திய, மாநில அரசு கள் பகிர்ந்து கொள்வது குறித்து அக்டோபர் மாத கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT