Published : 28 Jun 2019 08:18 AM
Last Updated : 28 Jun 2019 08:18 AM

வரி ஆய்வு முறையில் மாற்றம்: நிதி அமைச்சகம் தகவல்

வரி ஆய்வு முறையில் புதிய வழிமுறையை கொண்டுவர இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய நடைமுறையின் படி வரி செலுத்துபவருக்கும் அதனை ஆய்வு செய்யும் வரித் துறை அதிகாரிக்கும் நேரடித் தொடர்பு இருக்காது. இதனால் வரி ஆய்வின்போது ஏற்படும் முறை கேடுகளைத் தடுக்க முடியும் என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

தற்போதுள்ள வரி ஆய்வு நடைமுறையில், யாருடைய வரிக் கணக்குகளை ஆய்வு செய்கிறோம் என்று வரித்துறை அதிகாரிக்கும், தங்களுடைய கணக்குகளை யார் ஆய்வு செய்கிறார் என்று வரி செலுத்துபவருக்கும் தெரியும். இந்த நடைமுறையால் பல்வேறு முறைகேடுகள் நடந்து வந்தன. இந்நிலையில் இதில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுப்பதற்கும், வரி ஆய்வு செயற்பாட்டை துரிதமாக்குவதற்கும் புதிய நடைமுறையை கொண்டுவர இருப்பதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

வருவாய்த் துறையின் இணை செயலாளர் ரித்விக் பாண்டே மற் றும் தலைமை பொருளாதர ஆலோ சகர் கே. சுப்ரமணியன் ஆகியோர் இதற்கான பணிக் குழுவில் உறுப் பினர்களாக இருப்பார்கள் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x