Published : 10 Sep 2018 09:04 AM
Last Updated : 10 Sep 2018 09:04 AM
எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான திட்டம் உரு வாக்கப்படும் என்று மத்தியப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்க ளிப்பு 15 சதவீதமாக இருப்பதற் கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும் என்றார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
மின்னணு வாகன உற்பத்தியை இந்தியாவில் ஊக்கப்படுத்துவதற் கான திட்டம் உருவாக்கப்படும். ஒட்டுமொத்த வாகன உற்பத்தித் துறையில் மின்னணு வாகனங் களின் உற்பத்தி அடுத்த 5 ஆண்டு களில் 15 சதவீதமாக இருக்கும்.
காற்று மாசுவை குறைக்கும் விதமாக இந்தியா மிகத் தீவிரமாக மின்னணு வாகனங்களின் பயன் பாட்டை ஊக்குவித்து வருகிறது.
மத்தியப் போக்குவரத்து மற் றும் நெடுஞ்சாலைத் துறை அமைச் சகம் இது தொடர்பாக விரிவான அறிக்கையினை தயாரிக்க உள் ளது. எந்த விதமான நேரடி மானி யங்களும் இல்லாமல் இந்த இலக்கு எட்டப்படும். இதற்கான மானியம் அளிக்கத் தேவை யில்லை என்றும் தெளிவு படுத் தினார்.
எலெக்ட்ரிக் வாகனங்கள் 12 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் இருக் கும் என்றும், இதற்கு மானியம் அளிக்க வேண்டிய தேவையில்லை என்றும் கடந்த வாரத்தில் கட்கரி தெளிவுபடுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT