Published : 04 Sep 2018 03:55 PM
Last Updated : 04 Sep 2018 03:55 PM
நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் சில நாட்களாக அதிகரித்துக் கொண்டே வந்துள்ள நிலையில் செவ்வாயன்று விலைகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 86.72 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அதே போல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.75.74 என்ற புதிய உச்சத்தை மும்பையில் தொட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.31 என்று இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. டீசல் விலையும் இங்கு ரூ.71.34. என்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
டெல்லியில் பெட்ரோல் விலையில் தீர்வை ரூ.19.48, டீலர் கமிஷன் ரூ.3.63 மற்றும் மதிப்புக்கூட்டு வரி ரூ.16,83 (இதில் டீலர் கமிஷன் மீதான வாட் வரியும் அடக்கம்)
அதே போல் டெல்லி டீசல் விலையில் தீர்வை வரி ரூ.15.33, டீலர் கமிஷன் ரூ.2.51, வாட் வரி ரூ.10.46 ஆகியவை அடங்கும்.
கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ.82.22 ஆக உயர்ந்துள்ளது டீசல் விலை ரூ.74.19. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.41, டீசல் விலை ரூ.75.39.
பெட்ரோல், டீசல் விலைகள் இன்னும் உயரவே வாய்ப்புள்ளது, காரணம் திங்களன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவடைந்து டாலர் ஒன்றிற்கு ரூ.71.18 ஆக இருந்தது. அதே போல் திங்களன்று பிரெண்ட் ஆயில் பீப்பாய்க்கு 78 டாலர்களாக அதிகரித்தது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80%-ஐ இறக்குமதியே செய்கிறது. இதற்காக டாலர்கள் அதிகம் தேவைப்படுகிறது, அதற்கான ரூபாய்களைக் கொடுக்கும் போது அதிக ரூபாய்களைக் கொடுக்க வேண்டியுள்ளது. இது எரிபொருள் விலையை கடுமையாக உயர்த்துகிறது.
கடந்த ஏப்ரல்-ஜூலை இடையே இந்தியா ரூ.2,640.30 கோடி கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது என்று பெட்ரோலியம் திட்டம் மற்றும் பகுப்பாய்வு செல் தக்வல் ஒன்று தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT