Published : 27 Jun 2019 12:00 AM
Last Updated : 27 Jun 2019 12:00 AM
நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள அமிதாப் காந்தின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அரசு உத்தரவு நேற்று வெளியானது.
பணியாளர் நியமனத்துக்கான அமைச்சரவை குழு இந்த பதவி நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்தது. இம்மாதம் 30-ம் தேதியுடன் அமிதாப் காந்தின் பதவிக் காலம்முடிவடைய இருந்தது. இந்நிலையில் அவரது பதவிக் காலம்ஜூன் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT