Published : 04 Jun 2019 09:16 AM
Last Updated : 04 Jun 2019 09:16 AM
சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை நீடித்தாலும் இந்தியப் பங்குச் சந்தைகளில் ஏற்றத்தின் போக்கு தொடர்ந்துவருவதைப் பார்க்க முடிகிறது.
நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறி யீடான சென்செக்ஸ் வர்த்தக முடிவில் 553.42 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,267.62 என்ற நிலையில் நிறைவு செய்தது. அதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீ டான நிஃப்டி 165.75 புள்ளிகள் உயர்ந்து 12,088.55 புள்ளிகளில் நிறைவடைந்தது.
மீண்டும் பிரதமராகப் பொறுப் பேற்றுள்ள மோடி பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் சீர்திருத்தங்கள், கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருந்து வருகிறார். மேலும் ரிசர்வ் வங்கி வட்டி விகி தத்தைக் குறைக்கும் என்ற எதிர் பார்ப்பும் நிலவுகிறது. இந்தக் கார ணங்களால் சந்தையில் முத லீட்டாளர்கள் உற்சாகத்துடன் முதலீடு செய்துவருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT