Published : 25 Sep 2014 11:01 AM
Last Updated : 25 Sep 2014 11:01 AM

ஷில்பா திவேகர் நிருலா - இவரைத் தெரியுமா?

$ விவசாயத்துறையில் செயல்புரிந்து வரும் சர்வதேச நிறுவனமான மான்சான்டோ (Monsanto) இந்தியாவின் பிரிவு நிர்வாக இயக்குநர். இந்த பொறுப்பில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி பொறுப்பேற்றார்.

$ மேலும் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் மான்சான்டோவின் தலைமை செயல் அதிகாரியும் கூட.

$ விவசாயம் மற்றும் உணவுத் துறையில் 18 வருடங்களுக்கு மேலான அனுபவம் மிக்கவர்.

$ என் அப்பா ஒரு விவசாயி. அதனால் விவசாயிகளின் தேவைக்கு ஏற்றதுபோல சேவைகளை வழங்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

$ இந்தியாவில் இருக்கும் ரிஸ்க்கான தொழில்களில் விவசாயமும் ஒன்று. பயிர் காப்பீடு என்பது இந்தியாவில் மிகவும் குறைவாக இருக்கிறது. கடன் வாங்கியவர்களுக்கு காப்பீடு கிடைத்துவிடுகிறது. ஆனால் கடன் வாங்காத விவசாயிகளில் 4 சதவீதம் மட்டுமே காப்பீடு எடுத்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x