Published : 05 Mar 2018 11:23 AM
Last Updated : 05 Mar 2018 11:23 AM

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.516 கோடி

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், இந்திய பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.516 கோடியாக உள்ளது. 2017-18 நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 38 பேர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் இந்த வாராக்கடன் உருவாகியுள்ளது என்று நிதியமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பேசிய பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் சிலர், இந்த வாராக்கடன் கணக்குகளில் இருந்து எதிர்காலத்தில் தொகை திரும்புவதும் குறைவாகவே இருக்கும் என்று கூறினர். இந்த கடனாளிகளில் பலர் வாங்கிய கடனை உரிய தேவைகளுக்காக பயன்படுத்தவில்லை அல்லது திரும்ப செலுத்த முடியாத வகையில் செலவு செய்துள்ளனர். இந்த கடன் தொகையை பயன்படுத்தியதுடன், இந்த கடனுடன் சம்பந்தப்பட்ட சொத்துகளையும் வங்கிக்கு தெரியாமல் அடமானம் வைத்துள்ளனர்.

கடனை வேண்டுமென்றே திரும்ப செலுத்தாமல் உள்ளவர்களிடம், கடனை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் அடிப்படை யில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மார்ச் 2017 புள்ளிவிவரப்படி இந்திய பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடனில் எஸ்பிஐ வங்கி 27 % வைத்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் 1,762 கடனாளிகளின் வாராக்கடன் ரூ.25,104 கோடியாகும். இதற்கடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1,120 கடனாளிகளிடமிருந்து ரூ. 12,270 கோடி வாராக்கடன் உள்ளது. பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடனில் இந்த இரண்டு வங்கிகள் மட்டும் 40 சதவீதத்தை வைத்துள்ளன. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x