Published : 18 Sep 2014 11:19 AM
Last Updated : 18 Sep 2014 11:19 AM

ஆனந்த் தேஷ்பாண்டே - இவரைத் தெரியுமா?

$ பெர்சிஸ்டன்ட் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். தொழில்நுட்பத்தில் தொலை நோக்கு சிந்தனை கொண்டவர். அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தில் முதலீடு செய்பவர்.

$ 1990-ம் ஆண்டு புனேயில் 350 சதுர அடி இடத்தில் ரூ. 3.6 லட்சம் முதலீட்டில் இந்நிறுவனத்தைத் தொடங்கினார்.

$ பல துறைகளுக்கு தொழில்நுட்ப சேவை அளிக்கும் இந்நிறுவனத்துக்கு இன்று பல நாடுகளில் மையங்கள் உள்ளன. இந்நிறுவனத்தில் 7 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ. 1,500 கோடியாகும்.

$ 1990-ம் ஆண்டு இந்நிறுவனத்தை உருவாக்குவதற்கு முன்பு கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில் செயல்படும் ஹியூலெட் பக்கார்ட் நிறுவனத்தின் ஆய்வகத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

$ ஐஐடி காரக்பூரில் கம்ப்யூட்டர் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இந்தியானா பல்கலைக் கழகத்தில் முதுகலைப்பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்களைப் படிப்பதில் அதிக ஆர்வமுடையவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x