Published : 12 Sep 2014 10:23 AM
Last Updated : 12 Sep 2014 10:23 AM
டெபிட் கார்ட் இல்லாமல் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும் வசதியை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பணம் பெறுபவர் ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.
பொதுவாக வெளியூரில் வசிப்பவர்கள் தங்களுடைய உறவினர்களுக்கு, பணம் அனுப்புவது வழக்கம். பணம் அனுப்புபவர் மட்டுமின்றி பணத்தை பெறுபவருக்கும் வங்கியில் கணக்கு இருக்க வேண்டியது அவசியம்.
ஆனால் ஐசிஐசிஐ வங்கியின் புதிய முறையில் பணம் அனுப்புபவருக்கு மட்டும் வங்கிக் கணக்கு இருந்தால் போதுமானது. பணம் பெறுபவர் செல்போன் தகவல் அடிப்படையில் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்-மில் பணத்தை எடுக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT