Published : 12 Feb 2019 08:30 AM
Last Updated : 12 Feb 2019 08:30 AM
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சிக் காலத்தில் வரி தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிந்து போனது. நாடுஇப்போது வளர்ச்சிப் பாதையைநோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறினார்.
மக்களவையில் இடைக்கால பட்ஜெட் குறித்த கேள்விக்கு இடைமறித்து பதில் அளிக்கையில் அவர் இத்தகவலை வெளியிட்டார். அவர் மேலும் கூறியது:பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் நாட்டின் வளர்ச்சி சைக்கிள் வேகத்தில் இருந்தது. தற்போது என்டிஏ ஆட்சியில் வளர்ச்சி வேகம் விமானம் அல்லது ராக்கெட் வேகத்தில் உள்ளதாகக் கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் போடப்பட்ட பட்ஜெட்டானது கேக்போன்றது. இடைக்கால பட்ஜெட் கேக் மீது ஐஸ் வைத்தது போலுள்ளது என்றார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி செலுத்தும் அளவானது 10 சதவீதமாக இருந்தது. தற்போது என்டிஏ ஆட்சியில் 12 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றார். வரி விதிப்பானது மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. வரி வசூல் திறமையாக நிர்வகிக்கப்படுகிறது. இதனால் வரி தீவிரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
காங்கிரஸ் கட்சி வெறுமனே ரஃபேல் ஒப்பந்தத்தை குறை கூறுகிறது. 10 ஆண்டுக்கால யுபிஏ ஆட்சியில் ராணுவத்துக்கு குண்டு துளைக்காத உடைகள் கூட வாங்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT