Published : 18 Dec 2018 08:26 AM
Last Updated : 18 Dec 2018 08:26 AM
2020-ல் மொபைல் சேவைக்கான 5ஜி தொழில்நுட்பம் தயாராக இருக் கும் என இந்தியத் தொலைத் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 5ஜி தொழில் நுட்பத்தைக் கொண்டுவரும் முயற் சியில் இந்தியத் தொலைத் தொடர்பு துறையும், தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
டிராய் கடந்த டிசம்பர் 16 அன்று 5ஜி சேவைக்குத் தேவையான அலைக்கற்றைகள் உட்பட 8644 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை களை ஏலம் விடுவதற்குப் பரிந்து ரை செய்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 4.9 லட்சம் கோடி. தொலைத்தொடர்பு துறை செயலர் அருணா சுந்தர்ராஜன் தேசிய டிஜிட்டல் கம்யூனி கேஷன்ஸ் பாலிசி நடைமுறைப் படுத்தல் குறித்த பயிற்சிப்பட்டறை யில் பங்கேற்று பேசிய போது கூறியதாவது,
தொலைத்தொடர்பு துறையின் 5ஜி தொழில்நுட்ப செயலாக்க கமிட்டிக்கு டிராய் தரப்பிலிருந்து தேவையான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி 5ஜி தொழில்நுட்பத்துக்குத் தேவை யான கட்டமைப்புகளை உருவாக்கு வதில் கமிட்டி ஈடுபட்டுள்ளது. 5ஜி தொழில்நுட்பத்துக்கான கட்டமைப்பு தயார் நிலையில் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், வரும் 2019 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் 5ஜி தொழில்நுட்பத்துக்கான கட்டமைப்புத் தயாராக இருக்கும்.
மேலும் 5ஜி அலைக் கற்றைகளை ஏலம் விடுவதற்கான நடைமுறைகளும் வரும் ஆகஸ்ட்டுக்குள் நிறைவு செய்யப்படும். ஆனால், ஏலம் உடனே நடத்தப்படுமா என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியாது. 2020-ம் ஆண்டின் பாதியில் 5ஜி தொழில்நுட்பம் தயார் நிலையில் இருக்கும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். அதன்பிறகு 5ஜி தொழில்நுட்பம் நாடு முழுவதும் படிப்படியாக வழங்கப்படும். 5ஜி தொழில்நுட்பம் இந்தியப் பொருளாதாரத்தில் ரூ. 70 லட்சம் கோடி அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.
ஆனால், வோடபோன் ஐடியா நிறுவனம், இந்திய தொலைத்தொடர்பு துறை நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், 2020 வரை அலைக்கற்றை ஏலம் நடத்த கூடாது என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT