Published : 05 Sep 2014 10:27 AM
Last Updated : 05 Sep 2014 10:27 AM

டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரனுக்கு பதவி நீட்டிப்பு

டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் (டிசிஎஸ்) தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) உள்ள என். சந்திரசேகரனுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அவர் பதவியில் நீடிப்பார். அக்டோபர் 6-ம் தேதி முதல் பதவி நீட்டிப்பு வழங்கப்படுவதாக டிசிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவரது தலைமையில் நடப்பு நிதி ஆண்டின் (2014) முதல் காலாண்டில் நிறுவனம் ரூ. 85,933 கோடி வருமானம் ஈட்டியது. 2010-ம் ஆண்டில் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு வருமானம் ரூ. 29,091 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2009-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இவரது தலைமையில் 600 கோடி டாலர் வருமானம் ஈட்டி வந்த டிசிஎஸ் இப்போது 1340 கோடி டாலர் வருமானம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனத்தில் 3 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x