Published : 10 Sep 2014 10:01 AM
Last Updated : 10 Sep 2014 10:01 AM

திருப்பூரில் சர்வதேச ஜவுளி நூல் கண்காட்சி

திருப்பூர் திருமுருகன்பூண்டி இந்திய பின்னலாடைக் கண்காட்சி வளாகத்தில், யார்னெக்ஸ் 3 நாள் சர்வதேச ஜவுளி நூல்கள் கண்காட்சி செவ்வாயன்று தொடங்கியது.

கண்காட்சியை திருப்பூர் ஏற்று மதியாளர்கள் சங்கத்தலைவர் ஏ.சக்திவேல் தொடங்கி வைத்து பேசியது: முன்பு எப்போதும் இல்லாத அளவில் 86 அரங்குகளுடன் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பருத்தி ஆடைகளுக்கு மாற்றாக, பெர்பார்மன்ஸ் பேப்ரிக், ஈரத்தை எளிதாக உறிஞ்சி வெளியிடக்கூடிய நூல் களால் செய்யப்பட்ட ஆடைகள், ஸ்டீல் யார்ன் உள்ளிட்ட பல்வேறு பிரத்யேக ஆடைகள் இங்கு இடம்பெற்றுள்ளன.

பாலியஸ்டரை டை செய்யக் கூடிய நிறைய தொழிற்சாலைகள் இங்கு இல்லை. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டில், 18 ஆயிரம் கோடி ஏற்றுமதி வர்த்தகத்தை 25ஆயிரம் கோடி யாக அதிகரிப்பதற்கு இந்தக் கண்காட்சி உதவும் என்றார்.

இதையடுத்து பேசிய நிட்மா சங்கத்தலைவர் அகில் ரத்தினசாமி, பருத்தி நூல்களிலிருந்து மாற்று நூல்களுக்கு மாறிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கண்காட்சி, நம்முடைய தொழிலுக்கு மிக முக்கிய திருப்பு முனையாக அமைந்துள்ளது. ஏனென்றால், இங்கிலாந்து, சீனா, ஹாங்காங், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து

இங்கு அரங்குகள் அமைத்துள்ளனர். உற்பத்தியாளர்கள் நேரடியாக ஏற்றுமதியாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெறும் வகை யில் இங்கு புதிய வகை செயற்கை நூல்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், நமது வர்த்தகம் பல மடங்கு அதிகரிக்கும் என்றார். இக்கண்காட்சி நாளை வரை திருப்பூர் இந்திய பின்னலாடை கண்காட்சி வளாகத்தில், நடை பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x