Published : 28 Oct 2018 07:28 PM
Last Updated : 28 Oct 2018 07:28 PM
இந்தியாவில் 1970-களில் இருசக்கர வாகன ஓட்டிகளின் மனதை கவர்ந்த வாகனங்களில் முக்கியமானது ஜாவா. சீறிப் பாயும் ஜாவாவுக்கு என ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஆனால் பிற்காலத்தில் ஜாவா மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.
இப்போது மீண்டும் ஜாவா மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மோட்டார் சைக்கிளை கொண்டு வரும் முயற்சியில் இறங்கிய மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் ஜாவா மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
புதிய ஜாவா மோட்டார் சைக்கிளில் 293 சி.சி. திறன் இன்ஜினுடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. 27 பிஎச்பி திறவுடன், பியூயல் இன்ஜக்ஷன் தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது.
புதிய மோட்டார்சைக்கிளின் 293சிசி இன்ஜினுடன் 6 கியர்கள் கொண்டதாகவும் உள்ளது. நவம்பர் 15-ம் தேதி விற்பனைக்கு வரவுள்ள இந்த மோட்டர் சைக்களின் விலையும் அன்று தான் தெரிய வரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT