Published : 22 Oct 2018 10:04 AM
Last Updated : 22 Oct 2018 10:04 AM
ஒடிசா மாநிலத்தில் பெட்ரோலை விடவும் டீசல் விலை அதிகரித்து விற்பனை செய்ப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றால் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததால், சாமானிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளனர். அத்தியாவசிப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பால்பொருட்கள், போக்குவரத்து கட்டணம் என அனைத்தும் உயர்ந்துள்ளன.
சர்வசதே சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதால் ஐந்தாவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ.84.64-க்கும், டீசல் ரூ.79.22-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் குறைந்து ரூ.74.92க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் ரூ.86.91க்கும், டீசல் ரூ.78.54க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.80.65-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் டீசல் ஒரு லிட்டர் அதைவிட 13 காசுகள் அதிகமாக, ரூ.80.78க்கு விற்பனை செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT