Published : 26 Jul 2018 08:30 AM
Last Updated : 26 Jul 2018 08:30 AM
வருமான வரி தாக்கலுக்கு ஆதார் தேவையில்லை என டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆதார் மற்றும் ஆதார் என்ரோல்மென்ட் எண் இல்லாமல் வருமான வரி தாக்கலுக்கு அனுமதிக்க வேண்டும் என மத்திய நேரடி வரி ஆணையத்துக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்காக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் ஆதார் எண் இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் ஏ.கே.சாவ்லா உத்தரவிட்டிருக்கின்றனர். மேலும் இணையதளத்திலும் இதற்கான மாற்றம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டிருக்கின்றனர்.
டெல்லியை சேர்ந்த இரு வழக்கறிஞர்கள் இந்த வழக்கினை தொடுத்தனர். பல முறை முயற்சி செய்தும் ஆதார் எண் இல்லாமல் வருமான வரி தாக்கலை செய்ய முடியவில்லை. வருமான வரி இணையதளத்தில் இதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் இவர்கள் வழக்கு தொடுத்தனர்.
இவர்களிடம் இந்திய பாஸ்போர்ட், பான் கார்டு உள்ளிட்ட இதர தேவையான ஆவணங்கள் உள்ளன. ஆனால் ஆதார் எண் இல்லை என்பதால் தாக்கல் செய்ய முடியவில்லை. ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவில்லை எனில் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதால் இவர்கள் வழக்கு தொடுத்திருப்பதாக வாதிட் டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT