Published : 02 Jul 2025 06:30 AM
Last Updated : 02 Jul 2025 06:30 AM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024-25 நிதியாண்​டில் ரூ.63,339 கோடி வரி வசூல்

சென்னை: தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் 2024-25-ம் நிதி​யாண்​டில் ரூ.63,339 கோடி வரி வசூலாகி​யுள்​ள​தாக, ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணை​யர் ஏ.ஆர்​.எஸ்​.கு​மார் தெரி​வித்​துள்​ளார். இந்​தி​யா​வில் சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) கடந்த 2017 ஜூலை 1-ம் தேதி​முதல் நடை​முறைப்​படுத்​தப்​பட்​டது.

ஜிஎஸ்டி அறி​முகப்​படுத்​தப்​பட்டு 8 ஆண்​டு​கள் நிறைவடைந்​ததை அடுத்து தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி மத்​திய சரக்கு மற்​றும் சேவை வரி மண்​டலம் சார்​பில் சரக்கு மற்​றும் சேவை வரி தினம் சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று கொண்​டாடப்​பட்​டது. தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரிக்​கான முதன்மை தலைமை ஆணை​யர் ஏ.ஆர்​.எஸ்​.கு​மார் தலைமை தாங்​கி​னார். முன்னாள் முதன்மை ஆணை​யர் ராம் நிவாஸ் முன்​னிலை வகித்​தார்.

விழா​வில் ஏ.ஆர்​.எஸ்​.கு​மார் பேசுகை​யில், “இந்​தி​யா​வில் ஜிஎஸ்டி அமலாக்​கப்​பட்டு 8 ஆண்​டு​கள் நிறைவடைந்​துள்​ளது. ‘ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்​தை’ என்ற கொள்​கை​யின் அடிப்​படை​யில் கொண்​டு​வரப்​பட்ட ஜிஎஸ்டி நம் நாட்​டின் பொருளா​தார கட்​டமைப்பை மாற்​றி​யிருக்​கிறது. பொருளா​தார வளர்ச்​சி​யில் ஜிஎஸ்டி முக்​கியப் பங்​காற்றி இருக்​கிறது.

குறிப்​பாக ஜிஎஸ்டி மீதான சிறு, குறு மற்​றும் நடுத்தர தொழில்நிறு​வனங்​களின் பங்கு 78 சதவீதத்​திலிருந்து 82 சதவீத​மாக நடப்​பாண்டு உயர்ந்​திருக்​கிறது. தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் 2024-25 நிதி​யாண்​டில் ரூ.63,339 கோடி வரி வசூலிக்​கப்​பட்​டுள்​ளது. இது 2023-24-ம் நிதி​யாண்டை (ரூ.57,987 கோடி) விட 9.23 சதவீதம் அதி​க​மாகும். அதே​போல் நடப்பு நிதி​யாண்​டில் (2025-26) மே மாதம் வரை ரூ.11,209 கோடி வரி வசூலாகி இருக்​கிறது.

இது கடந்த ஆண்டை விட 13.5 சதவீதம் அதி​க​மாகும். இதற்​கிடையே வரி செலுத்த தவறிய​வர்​கள், வரி ஏய்ப்​பு, தணிக்​கை, புதிய பதிவு​கள் ஆகிய​வற்​றில் 11.62 முதல் 23.85 சதவீதம் வரை கடந்த ஆண்டை காட்​டிலும் வரி வசூல் உயர்ந்​துள்​ளது” என்று தெரிவித்தார்.

முன்​ன​தாக வரி செலுத்​துவோரில் சிறந்த செய​லாற்​றிய வணி​கர்​கள், சிறப்​பாகப் பணிபுரிந்த சரக்கு மற்​றும் சேவை வரி அலு​வலர்​களுக்கு பாராட்​டுச் சான்​றிதழ்​கள் வழங்​கப்​பட்​டன. இந்​நிகழ்​வில் கார்​போரண்​டம் யுனிவர்​சல் நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் ஸ்ரீதரன் ரங்​க​ராஜன், ஜிஎஸ்டி வடசென்னை பிரிவு தலைமை ஆணை​யர் ராம்​நாத் ஸ்ரீனி​வாச நாயக்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x