Published : 03 Jun 2018 08:47 AM
Last Updated : 03 Jun 2018 08:47 AM

ஏர்பஸ் நிறுவனத்துக்கு சுரேஷ் பிரபு அழைப்பு

`மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், ஏர் பஸ் நிறுவனம் இந்தியாவில் விமானங்களை தயாரிப்பதற்கு முன்வர வேண்டும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்திருக்கிறார். மேலும் இந்தியாவில் விமான போக்குவரத்து துறை வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் கூறியிருக்கிறார்.

பிரான்ஸுக்கு அரசு முறை பயணமாக சென்றிருக்கும் சுரேஷ் பிரபு, டௌலோஸ் நகரில் அமைந்திருக்கும் ஏர்பஸ் ஆலைக்கு சென்றிருக்கிறார். ஏர் பஸ் இந்தியாவில் விமானம் தயாரிக்க முடிவெடுத்தால், இதன் மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்பு உருவாகும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x