Published : 19 May 2018 08:21 AM
Last Updated : 19 May 2018 08:21 AM
தொலைத்தொடர்பு பயனாளிகள் தங்களது சேவை நிறுவனங்களை மாற்றுகையில் புதிய சிம் கார்டு வாங்கத் தேவையில்லை. இ-சிம் கார்டு முறைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய சிம் கார்டு வாங்குவதற்கும் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மத்திய தொலைத் தொடர்புத்துறை இது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு ள்ளது.
வாடிக்கையாளர்கள் புதிய செல்போன் இணைப்பு வாங்கும்போது அல்லது ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு செல்போன் எண்ணை மாற்றும்போது புதிய சிம் கார்டு க்கு பதிலாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அவர்களது செல்போனில் இ-சிம்மை நிறுவ வேண்டும்.
மாறிவரும் தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப நிறுவனங்கள் இவற்றை பூர்த்தி செய்து தர வேண்டும். உட்பொதியப்பட்ட சந்தாதாரர் அடையாள எண் (e-SIM) அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகவும், ஒரே சேவை நிறுவனம் அல்லது பல்வேறு சேவை நிறுவன சேவைகளை பெறுவது, செல்போன் மூலமாகவே சேவைகளை மேம்படுத்துவதை நிறுவனங்கள் அளிக்க வேண்டும். சர்வதேச தரம் மற்றும் சர்வதேச அளவில் அளிக்கப்படும் சேவைகளுக்கு முன்கூட்டியே இதன் மூலம் தயாராக முடியும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் -3 விற்பனையையை தொடங்கியுள்ள ஐந்து நாட்களில் தொலைத் தொடர்புத்துறை இந்த வழிகாட்டுதலை அளித்துள்ளது.
ஆப்பிள் வாட்ச் பயனாளிகள் தங்களது செல்போன் சிம் இணைப்பின் மூலமாக இ-சிம் இணைப்பு பெறலாம். ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தாங்கள் அளிக்கும் செல்போன்கள் மூலமும் இந்த சேவையினை அளிக்கிறது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வான் வழியாக அளிக்கும் சேவைகளில் மொபைல் எண் போர்டபிலிட்டி சேவையை அளிக்க தொலைத் தொடர்பு துறை புதிய நடைமுறை மூலம் அனுமதி அளித்துள்ளது. தவிர தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அளிக்கும் செல்போன்களை லாக் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.
சேவை நிறுவனங்களுக்கு அளித்துள்ள வழிகாட்டுதலில், இ-சிம் சேவையை அளிக்கும் நிறுவனங்கள் தங்களது பொறுப்பினை உணர வேண்டும். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தேவைகளுக்கு ஏற்ப செல்போன்கள் தயாரிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இ-சிம் குறித்த வழிகாட்டுதல்களில், இ-சிம் மூலம் இயந்திரத்திலிருந்து இயந்திரத்தை (M2M) தொடர்பு கொள்ள பயன்படுத்தலாம். குறிப்பாக காரிலிருந்து செல்போனுக்கு தகவல் அளிக்க பயன்படுத்தலாம். இதன் மூலம் கார் கண்காணிப்பு மேம்படும்.
தொலைத் தொடர்பு துறை முன்னரே அறிவித்தபடி எம்2எம் சிம்கள் 13 எண்களைக் கொண்டதாக இருக்கும். இப்போதுவரை இந்த சிம்களின் தேவை மிக அதிகமாக உள்ளது. மேலும் ஒருவர் 18 இணைப்புகளை வைத்திருக்கவும் அனுமதிக்கிறது. இதில் 9 சிம்கள் வழக்கமான செல்போன்களில் கார்டு முறையில் பயன்படுத்தலாம். இதர 9 சிம்கள் எம் 2 எம் தொடர்புகளுக்காக வாங்கலாம்.
மேலும், முன்கூட்டியே நிறுவப்பட்ட எம் 2எம் சாதனங்களை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சரிபார்ப்புக்கு ஒத்துழைக்க வேண்டும். எனினும் இந்த சாதனங்களின் முழு பொறுப்பு பயனாளிகளையே சேரும். இந்த சாதனங்களை கைமாற்றும்பொழுது சேவைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT