Published : 22 May 2018 08:44 AM
Last Updated : 22 May 2018 08:44 AM
பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) தரச்சான்றை மூடி’ஸ் நிறுவனம் குறைத்துள்ளது. நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் செய்த நிதி மோசடியால் வங்கிக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கி திரட்டும் சேமிப்புகள் மீதான தரச் சான்றை மூடிஸ் நிறுவனம் பிஏஏ3/பி-3 என்ற நிலையிலிருந்து பிஏ1/என்பி என்ற நிலைக்கு தகுதிக் குறைப்பு செய்துள்ளது.
வங்கியில் நிதி மோசடி நிகழ்ந்ததாக கடந்த பிப்ரவரி 14-ம் தேதி பிஎன்பி தெரிவித்தது. பிப்ரவரி 20-ம் தேதி முதல் வங்கியின் நிதி நிலை, கடன் வழங்கும் திறனை மூடி’ஸ் மதிப்பீடு செய்தது. வெளிநாட்டு கடன் வழங்கும் அமைப்பின் தரத்தையும் குறைத்துள்ளது. முன்னர் பிஏஏ3 என்றிருந்தது தற்போது பிஏஏ 1 என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது. வங்கியின் கடன் வழங்கும் மதிப்பீடு ஸ்திரமாக உள்ளதாக மூடி’ஸ் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT