Published : 20 May 2018 08:57 AM
Last Updated : 20 May 2018 08:57 AM
இறக்குமதி பொருட்களுக்கான வரி தொடர்பாக அமெரிக்கா மீது உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா புகார் அளித்துள்ளது. இந்தியாவிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியம் போன்றவற்றுக்கான இறக்குமதி வரி ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக உள்ளது என இந்தியா கூறியுள்ளது.
அமெரிக்காவுக்கான ஸ்டீல் மற்றும் அலுமினியப் பொருட் கள் ஏற்றுமதியில் இந்த வரி விதிப்பின் காரணமாக தாக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து இந்தியா உலக வர்த்தக அமைப்பை நாடியுள்ளது. ஆனால் உலக வர்த்தக விதிமுறைகளின்படி இந்த புகார் அளிக்கப்படவில்லை. உலக வர்த்தகக் கழகத்தில் ஒப்பந்த முறை சர்ச்சைகள் அடிப்படையில் ஆலோசனைகளுக்கு பிறகே இந்தியா புகார் அளித்துள்ளது.
இரண்டு நாடுகளும் சுமூகமாக ஏற்றுக் கொள்ளும் ஆலோசனை எட்டப்படாததால், இது குறித்த ஆய்வு செய்ய இந்தியா உலக வர்த்தக அமைப்பிடம் கோரிக்கை வைத்துள்ளது. மார்ச் 9-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியம் மீது அதிக வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். இதனால் உலக வர்த்தகத்தில் சிக்கல் உருவாகும் சூழல் எழுந்துள்ளது.
கனடா, மெக்ஸிகோ தவிர இதர நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியத்திற்கு 10 சதவீதமும் உருக்கு பொருட்களுக்கு 25 சதவீதமூம் வரி விதிக்க உத்தரவிட்டார். இதனால் இந்தியாவின் ஏற்றுமதியில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியா ஆண்டுக்கு 150 கோடி டாலர் அளவுக்கு அமெரிக்காவுக்கு அலுமினியப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT