Published : 16 Apr 2018 10:17 AM
Last Updated : 16 Apr 2018 10:17 AM

கீதாஞ்சலி ஜெம்ஸ் காரணமாக வங்கிகளின் வாராக்கடன் ரூ.8,000 கோடி அதிகரிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் 2017-2018 நிதியாண்டின் நான் காம் காலாண்டுக்கான கடன்தொகையை திருப்பிச் செலுத் தாத காரணத்தால் வங்கிகளின் வாராக்கடன் மேலும் ரூ.8,000 கோடி அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இந்த தொகைக்கு வங்கிகள் ஒதுக்கீடு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டி ருக்கிறது.

கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மெகுல் சோக்ஸிக்கு சொந்தமானதாகும். 2010-2011 காலகட்டத் தில் அலகாபாத் வங்கி தலைமையிலான 21 வங்கிகள் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்துக்கு கடன் அளித்துள்ளன. 2014-ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கி தலைமையிலான வங்கிகள் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்துக்கு கடன் அளித்தன. இதில் இந்த வங்கிக்கு மட்டும் ரூ.900 கோடி கடன், வாராக்கடனாக உள்ளது.

டிசம்பர் 2017 வரை வங்கிகளுக்கான கடன் சரியாக திருப் பிச் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வெளிச்சத்துக்கு வந்து மெகுல் சோக்ஸி தலைமறைவாகிவிட்ட நிலையில் கடந்த நிதியாண்டின் மார்ச்-31 வரையிலான கடைசி காலாண்டில் கடன் தொகை திருப்பி செலுத்தப்படவில்லை. எனவே வங்கிகள் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்துக்கு அளித்த கடனை வாராக்கடனாக அறிவிக்க இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x