Published : 24 Feb 2018 07:51 AM
Last Updated : 24 Feb 2018 07:51 AM

இவரை தெரியுமா?: தேப்ஜானி கோஷ்

நாஸ்காம் அமைப்பின் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

யெஸ் வங்கியில் தினசரி பொறுப்புகள் இல்லாத இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். சிஸ்கோ இந்தியா அறிவுரைக் குழு உறுப்பினர்களில் ஒருவர்.

இன்டெல் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கி அதன் தெற்காசியப் பிரிவுக்கான நிர்வாக இயக்குநர் பதவி வரை சென்றவர்.

ஃபிக்கி, மெய்ட் அமைப்புகளின் உறுப்பினராக இருந்தவர். இன்டெல் இந்தியாவின் தலைமைப் பொறுப்புக்கு வந்த முதல் பெண் , மெய்ட் அமைப்பின் தலைவரான முதல் பெண் போன்ற பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்.

இந்திய தொழில்துறையில் வலிமை வாய்ந்த 20 பெண்களில் ஒருவர் என பார்ச்சூன் இந்தியாவால் 2012-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளுக்கு குறிப்பிடப்பட்டவர்.

மார்க்கெட்டிங் பிரிவில் வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x