Published : 04 Feb 2018 09:31 AM
Last Updated : 04 Feb 2018 09:31 AM

இந்த ஆண்டுக்குள் ஏர் இந்தியா பங்கு விலக்கல்: மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தகவல்

ஏர் இந்தியா பங்கு விலக்கல் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும். ஏர் இந்தியா யார் வசம் செல்லும் என்னும் தகவல் வரும் ஜூன் மாதத்துக்குள் தெரியும் என மத்திய இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கடனில் சிக்கி இருக்கும் நிறுவனமான ஏர் இந்தியா, பொதுமக்களின் வரிப் பணத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை நான்கு நிறுவனமான பிரித்து விற்கப்படும். தனியார் நிறுவனங்கள், ஏர் இந்தியாவில் 51 சதவீதத்துக்கு மேலான பங்குகளை வைத்திருக்கலாம். அடுத்த சில வாரங்களுக்குள் பங்கு விலக்கல் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

அந்த அறிவிப்பில் அரசாங்கத்தின் பங்கு எவ்வளவு, எவ்வளவு சொத்துகள் என்பது உள்ளிட்ட நிறுவனத்தின் தகவல்கள் இருக்கும்.

நிறுவனம் யார் வசம் செல்லும் என்னும் தகவல் ஜூன் மாதத்துக்குள் தெரிந்துவிடும். அடுத்தாண்டு வேறு ஒரு நிறுவனம் ஏர் இந்தியாவை இயக்கும். ஏர் இந்தியாவில் அரசாங்கத்தின் பங்கு 49 சதவீதம் அல்லது அதற்கும் கீழ் இருக்கும்.

இரு நிறுவனங்கள் ஏர் இந்தியா பங்குகளை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கின்றன. இண்டிகோ நிறுவனம் வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறது.

வெளிநாட்டு நிறுவனம் ஒன்றும் வாங்க விருப்பம் தெரிவித்திருக்கிறது. ஆனால் அந்த நிறுவனம் குறித்து தற்போது தெரிவிக்க இயலாது. ஏர் இந்தியா நான்கு நிறுவனங்களாக பிரிக்கப்படும் என்று ஜெயந்த் சின்ஹா கூறினார். 2018-19-ம் நிதி ஆண்டுக்கு பட்ஜெட்டில் ரூ.650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x