Published : 12 Feb 2024 04:12 AM
Last Updated : 12 Feb 2024 04:12 AM

வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு @ வேலூர்

பிரதிநிதித்துவப் படம்

வேலூர்: வரத்து குறைந்ததால் வேலூரில் மீன்கள் விலை நேற்று அதிகரித்தது. நாகை மாவட்டம், கோழிக் கோடு, மங்களுரு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வேலூருக்கு மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் 100 முதல் 120 டன் அளவுக்கு மீன்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், வேலூர் மார்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. இதன் காரணமாக, மீன்களின் விலை நேற்று உயர்ந்து காணப்பட்டது. பெரிய வஞ்சிரம் கிலோ ரூ.900 முதல் 1,000 வரையும், சிறிய வஞ்சிரம் ரூ.500 முதல் ரூ.600 வரையும், சங்கரா ரூ.450 முதல் ரூ.500 வரையும், நண்டு ரூ.400 முதல் ரூ.500 வரையும், இறால் ரூ.400 முதல் ரூ.500 வரையும், கடல் வவ்வா ரூ.700 முதல் ரூ.650 வரையும், டேம் வவ்வா ரூ.200, நெய் மீன் ரூ.160-க்கும், மத்தி ரூ.200-க்கும், கட்லா ரூ.250-க்கும், ரோகு ரூ.250-க்கும், கிழங்கா ரூ.250-க்கும், விரால் மீன் ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்பட்டன.

வரத்து குறைவால் மீன்கள், இறால், நண்டு போன்றவை விலை உயர்ந்து காணப் பட்டாலும், அதை பொருட் படுத்தாத அசைவப் பிரியர்கள் அதிக விலை கொடுத்து தங்களுக்கு தேவையான மீன் வகைகளை வாங்கிச்சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x