Published : 15 Jan 2024 06:33 AM
Last Updated : 15 Jan 2024 06:33 AM

இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.8.3 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவோர் எண்ணிக்கை 10 கோடியாக உயரும்: கோல்டுமேன் சாக்ஸ் மதிப்பீடு

புதுடெல்லி: ஆண்டுக்கு ரூ.8.3 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 2027-ம் ஆண்டுக்குள் 10 கோடியாக உயரும் என்று சர்வதேச முதலீட்டு நிறுவனம் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

இந்தியர்களின் வருமானம், நுகர்வுத் திறன், சொத்து உள்ளிட்டவை தொடர்பாக கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் 3-வது இடத்துக்கு முன்னகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய மக்களின் வருவாய் அடுத்த 3 ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கும் என்றுஅந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

பல துறை வளர்ச்சி: ஆண்டுக்கு ரூ.8.3 லட்சம் வருவாய் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 2015-ம் ஆண்டு 2.4 கோடியாக இருந்தது. தற்போது அது 6 கோடியாக உயர்ந்துள்ளது. 2027-ம் ஆண்டில் அது 10 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உணவு, ஆடை, ஆபரணங்கள் உள்ளிட்ட துறைகள் பெரும் வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட் தவிர்த்து பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வது கடந்த 5 ஆண்டுகளில் பெரும் அளவில் அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் 12 கோடிக்கு மேற்பட்ட டீமேட் கணக்குகள் உள்ளன.

அதேசமயம், மேல்வர்க்கத்தின ருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக் கும் இடையில் செலவு செய்யும் திறனில் இன்னமும் பெரும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது என்று அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x