Published : 31 Dec 2017 10:42 AM
Last Updated : 31 Dec 2017 10:42 AM
பொதுத்துறை வங்கியான கனரா வங்கி மியூச்சுவல் பண்ட் தொழிலில் இருந்து வெளியேறும் திட்டம் இல்லை என அறிவித்திருக்கிறது. கனரா வங்கியும், ரொபெகோ நிறுவனமும் இணைந்து கனரா ரொபெகோ மியூச்சுவல் பண்ட் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் மியூச்சுவல் பண்ட் பிரிவில் இருந்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வெளியேற இருப்பதாக கனரா வங்கி அறிவித்தது. ஆனால் தற்போது மியூச்சுவல் பண்ட் பிரிவில் அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வளர்ச்சி தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதற்காக மியூச்சுவல் பண்ட் தொழிலில் இருந்து வெளியேறப் போவதில்லை என கனரா வங்கி அறிவித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT