Published : 27 Dec 2017 10:35 AM
Last Updated : 27 Dec 2017 10:35 AM

சென்செக்ஸ் புதிய உச்சம் 34,000 புள்ளிகளை தாண்டியது

இந்திய பங்குச் சந்தைகள் நேற்று புதிய உச்சத்தைத் தொட்டன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 34,000 புள்ளிகளைக் கடந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 10,500 புள்ளிகளைக் கடந்துள்ளது. நேற்றைய தொடக்கத்தில் சரிந்த வர்த்தகம், சீராக சரிந்தே வர்த்தகமானது. ஆனால் வர்த்தகத்தின் கடைசி 30 நிமிடங்களில் சென்செக்ஸ் 130 புள்ளிகள் வரை திடீர் ஏற்றம் கண்டது. நிப்டி 50 புள்ளிகள் வரை திடீர் ஏற்றம் கண்டது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 34010 புள்ளியிலும், நிப்டி 38.50 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10531 புள்ளியிலும் முடிந்தது. ஆண்டு இறுதி நாட்கள் மற்றும் தொடர்ச்சியான விடுமுறை காரணமாக சந்தை திடீர் ஏற்றம் கண்டுள்ளது.

நேற்றைய வர்த்தகத்தில் உலோகம் மற்றும் பார்மா துறை பங்குகள் அதிக ஏற்றம் கண்டன. பொதுத்துறை குறியீடு மட்டும் சிறிய அளவில் சரிந்தது. மிட்கேப் பங்குகளும் நேற்று லாபம் கண்டன. வர்த்தக இறுதி நேரத்தில் அனைத்து துறை குறியீடுகளும் ஏற்றத்தில் இருந்தன.

நேற்றைய வர்த்தக முடிவில் 1688 பங்குகள் ஏற்றத்திலும், 1084 பங்குகள் இறக்கத்தையும் கண்டன. 178 பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை. பார்தி ஏர்டெல், அம்புஜா சிமெண்ட், சன்பார்மா, பாஸ் நிறுவனப் பங்குகள் 2 சதவீதம் வரை ஏற்றம் கண்டன, எஸ்பிஐ, கோல் இந்தியா, என்டிபிசி பங்குகள் இறக்கத்தைச் சந்தித்தன. ஆர்-காம் நிறுவனத்தின் 87 சதவீத கடனை குறைப்பதற்கான திட்டத்தினை அனில் அம்பானி வெளியிட்டுள்ளதால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் நேற்று 31 சதவீதம் ஏற்றம் கண்டது. சந்தை ஏற்றத்தை கண்டாலும் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடனே அணுகுவார்கள். முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் சாதகமான விஷயங்கள் வரும் நாட்களில் வெளியானால் சந்தை ஏற்றம் தொடரும் என்று சந்தை நோக்கர்கள் குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x