Published : 27 Sep 2023 11:06 AM
Last Updated : 27 Sep 2023 11:06 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 345 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (புதன்கிழமை) சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 142 புள்ளிகள் சரிவடைந்து 65,803 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 41 புள்ளிகள் சரிந்து 19,623 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின. காலை 10:24 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 345.72 புள்ளிகள் சரிவடைந்து 65,599.75 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 25.35 புள்ளிகள் சரிந்து 19,583.70 ஆக இருந்தது.

வெளிநாட்டு நிதி வெளியேற்றம், ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்போசிஸ், டிசிஎஸ் மற்றும் உலோக பங்குகளின் சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, இன்டஸ்இன்ட் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட் பங்குகள் உயர்வில் இருந்தன.

ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, நெஸ்ட்லே இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், இன்போசிஸ், டைட்டன் கம்பெனி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா மோட்டார்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், மாருதி சுசூகி, இன்டஸ்இன்ட் பேங்க், விப்ரோ, டெக் மகேந்திரா பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x