Published : 10 Dec 2017 09:29 AM
Last Updated : 10 Dec 2017 09:29 AM
பெட்ரோலுடன் மெத்தனாலை 15 சதவீத அளவுக்கு கலப்பது தொடர்பாக புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இது தொடர்பாக புதிய கொள்கை வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். பெட்ரோலுடன் மெத்தனால் கலப்பதால் சுற்றுச் சூழல் மாசுபடுவது குறையும். அதேசமயம் விலையும் குறையும் என்று அவர் குறிப் பிட்டார்.
நிலக்கரி சுரங்க படுகையிலிருந்து கிடைக்கும் மெத்தனால் லிட்டர் விலை ரூ.22 பெட்ரோலின் விலை லிட்டர் ரூ.80 என்ற விலை யில் உள்ளது. சீனா, நிலக்கரி சுரங்க படுகையில் கிடைக்கும்மெத்தனாலை லிட்டர் ரூ.17 என்ற விலைக்கு விற்பனை செய்கிறது. மெத்தனால் விலை குறைவு, அதேசமயம் சுற்றுச் சூழலும் மாசடைவது குறையும்.
ஸ்வீடனைச் சேர்ந்த வோல்வோ நிறுவனம் தலைநகர் டெல்லியில் மெத்தனாலில் இயங்கும் பஸ்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுபோன்ற 25 பஸ்களை இயக்க அரசு திட்ட மிட்டுள்ளது.
மெத்தனால் உற்பத்தி தொடர் பான முதலீட்டு வாய்ப்பு ரூ.1.50 லட்சம் கோடியாக உள்ளதாக வும் கட்கரி குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT